Sunday, June 30, 2013

கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் - சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் - சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

உலகில் பல லட்சக்கணகான சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும், சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு இட்டுச் செல்வதாக இருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

சிறாரை தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சிறார் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒழிப்பதற்கான ஒழுங்குவிதிகள் தேவை என்று அது கோரியுள்ளது.

ஒரு கோடியே 5 லட்சம் சிறார்கள் (பெரும்பாலானோர் சிறுமிகள்) வீட்டு வேலையாட்களாக செயற்படுவதாகவும், துப்பரவு செய்தல், சமைத்தல், குழந்தைகளை மற்றும் முதியவர்களை பராமரித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும் அது கூறுகிறது.

இவர்கள் 14 வயதுக்கு கீழானவர்களாவர்.இவர்களில் பலருக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும்கல்விக்குவாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது.

இவர்களில் சிலர் கடத்தப்படுவதுடன், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.


No comments:

Post a Comment