Sunday, June 30, 2013

சோசலிசக் கட்சியைச் சேர்ந்த சேனன் உரை

“13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் இன்று (29.06.13) நடந்த கலந்துரையாடலில் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த சேனன் உரையாற்றினார்.

உலகப் புரட்சி என்னும் ரொக்சிய கட்சியை சேர்ந்த அவரின் உரையில் இந்த 13வது திருத்த சட்டத்தின் பின்னனியில் உள்ள ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சி பற்றி விளக்கம் இருக்கும் என எதிர் பார்த்தேன். வர்க்கப் போராட்டத்தின் அவசியம் குறித்து பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ ஜே.வி. பியும் அதனில் இருந்து பிரிந்து வந்த சோசலிச முன்னனியும் இனவாதக் கட்சிகள் என வலியுறுத்துவதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். “சமஉரிமை இயக்கத்தில் இருக்கும் சோசலிச முன்னனியினர் தமிழ்மக்களின் பிரிந்துபோகும் சுயநிர்ணயத்தை ஆதரிக்கவில்லை. எனவே அவர்கள் ஒரு இனவாதக் கட்சினர்” என்றார். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காவிடின் அவை இனவாதக் கட்சியினர் என புலிகளே கூறாத நிலையில் தன்னை சோசலிசவாதி என அழைத்துக் கொள்ளும் சேனன் அவர்கள் இவ்வாறு சோசலிச முன்னனியை குற்றம் சாட்டியது குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.

அடுத்து உரையாற்றிய பாறூக் அவர்கள் “மாகாணசபையின் அதிகாரம் அதிகம் வழங்கப்பட்டிருக்கிறது என்று சிங்களவர்கள் எதிர்த்தார்கள். அதிகாரம் குறைவு என்று தமிழர்கள் எதிர்த்தார்கள். முஸ்லிம் மக்கள் கவனத்தில் கொள்ளப்படவேயில்லை . இவ்வாறு மூன்று இன மக்களாலும் வெறுக்கப்பட்ட மாகாணசபையை ஆரம்ப புள்ளியாக வைத்து தொடர்ந்து போராட வேண்டும்” என வலியுறுத்தினார். எப்படி இதை தொடக்கப்புள்ளியாக கொள்ள மூன்று இன மக்களையும் ஒன்றாக்க முடியும் என்பது குறித்து அவர் விளக்க தவறிவிட்டார்.

அடுத்து மருத்துவர் பாலா உரையாற்றினார். இவரும் அண்மையில் நடைபெற்ற டில்லி மாநாட்டில் பங்குபற்றியவர். காணி பொலிஸ் அதிகாரங்கள் குறித்த சிங்கள மக்களின் அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment