Sunday, June 30, 2013

மணிவண்ணன் அவர்களின் மறைவினால் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் கொண்டுள்ள கவலையை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

• மணிவண்ணன் அவர்களின் மறைவினால் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் கொண்டுள்ள கவலையை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

• மாரடைப்பால் அகால மரணமடைந்திருக்கும் மணிவண்ணன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை இலங்கைத் தமிழர்கள் சார்பில் தெரிவித்தக்கொள்கிறோம்.

மணிவண்ணன் தனது இறுதிக்காலங்களில் புலிகளுக்கு ஆதரவாளராக இருந்திருந்தாலும் அவரது ஆரம்பகாலங்களில் டெலோ இயக்க போராளிகளே நெருக்கமாக இருந்தனர். டெலோ இயக்க தலைவர் சிறீசபாரட்ணம் புலிகளால் கொல்லப்பட்டு அவ் இயக்கம் தடை செய்யப்பட்ட போது சென்னையில் இருந்த அவ் இயக்க உறுப்பினர்கள் மிகவும் கஸ்டப்பட்டனர். அப்போது சிலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு சென்று உதவி கேட்டனர். தானே சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்டப்படுவதாகவும் தன்னால் உதவி செய்ய முடியாது என்றும் சிவாஜி கணேசன் கூறிய வேளையில் தன்னிடம் வந்த போராளிகளுக்கு உதவி செய்து ஆதரித்தவர் மணிவண்ணன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அவரிடம் உதவி பெற்ற ஒரு டெலோ போராளி சிறையில் என்னுடன் இருந்தபோது இதுபற்றிய தமது அனுபவங்களை என்னிடம் கூறியிருந்தார்.

மணிவண்ணன் இயக்கிய “இனி ஒரு சுதந்திரம்” என்னும் படத்தில் மாக்சிய தலைவர்களான மாக்ஸ, லெனின் போன்றவர்களின் படங்கள் நூல்கள் என்பவற்றை அவர் காட்டியிருந்தார். இது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இவர் ஒரு காலத்தில் மாக்சிய லெனிய (நக்சலைட்) இயக்கங்களில் ஆர்வமாக செயற்பட்டவர் என்பதை மக்கள் உரிமைக் கழக தலைவர் பி.வி பக்தவச்சலம் மற்றும் அவரது தோழர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

எனது நண்பர் தேவதாஸ் ( தற்போது இலங்கை சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்) மணிவண்ணனுடன் பழகியதை என்னிடம் பல முறை கூறியிருக்கிறார். தனது சினிமா முயற்சிகளுக்கு மணிவண்ணன் பல உதவிகள் செய்ததை அவர் நன்றியுடன் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். ஏனெனில் இலங்கைத் தமிழரான பாலு மகேந்திராவே தயங்கிய வேளையில் மணிவண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி பல இலங்கைத் தமிழர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார்.

புலிகள் பலமாக இருந்தபோது புலிகளுடன் சேர்ந்து தங்களை அடையாளப்படுத்திய பலர் புலிகள் யுத்ததத்தில் நெருக்கடியான நேரத்தில் எதவி கொரியபோது தமது தொலைபேசியை அணைத்தவிட்டு பதுங்கியவர்களை நாம் அறிவோம். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு தனது மரணத்தில் புலிக்கொடி போர்த்த வேண்டும் என மணிவண்ணன் கோரியது அவரது இலங்கைத் தமிழர்கள் மீதான உறுதியான அன்பு ஆதரவுக்கு எடுத்தக்காட்டாகும்.

நான் சிறைவைக்கபட்டிருந்த வேளை அவர் என்னை நேரில் சந்திக்க விரும்பினார். தமிழ்நாடு விடுதலைப் படைத்தளபதி தோழர் தமிழரசன் பற்றி அறிய விரும்பினார். ஆனால் துரதிருஸ்வசமாக அவரது விரும்பம் இதுவரை நிறைவேறாதது குறித்து மிகவும் வருந்துகிறேன்.

மணிவண்ணன் அவர்கள் ஆசைப்பட்டபடி அவர் புலிக்கொடியுடன் விடைபெறுகிறார். ஆனால் அவரது நினைவுகள் இலங்கை தமிழர்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.


No comments:

Post a Comment