Sunday, June 30, 2013

41வது இலக்கிய சந்திப்பு

• 41வது இலக்கிய சந்திப்பு

41வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் யூலை 20-21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. இதுவரை புலத்தில் நடைபெற்று வந்த இவ் இலக்கிய சந்திப்பு முதன் முதலாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் இது எதிர்பார்க்கப்பட்டது போன்று பல்வேறுபட்ட விமர்சனங்களை தோற்றுவித்து வருகின்றது.

அரசுக்கு ஆதரவாக அல்லது அரச ஆதரவாளர்களால் இவ் சந்திப்பு நடத்தப்படுவதாக ஒரு விமர்சனம் இம்முறை வைக்கப்படுகிறது. கடந்த 40 சந்திப்புகளில் வைக்கப்படாத இவ் விமர்சனம் இம்முறை எதற்காக முன்வைக்கப்படுகிறது என்று புரியவில்லை? யார் அரச ஆதரவாளர்கள்? யார் உண்மையான மக்கள் போராளிகள்? என்பதை யெல்லாம் இனங்காண முடியாத அளவிற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள் .

வழக்கம்போல் அனைத்து கருத்துகளுக்கும் இடமளிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் இவ் வாய்ப்பினைப் பயன்படுத்தி மக்களுக்கான இலக்கிய சந்திப்பாக இதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இலக்கிய சந்திப்பு வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

No comments:

Post a Comment