Wednesday, December 25, 2013

• ரிலாக்ஸ் பிளீஸ்!

• ரிலாக்ஸ் பிளீஸ்!

நான் எப்போதும் சீரியஸ்சான அரசியல் விடயங்களையே எழுதுவதாக சில நண்பர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். அவர்களுக்காக இந்த பதிவை பகிர்கிறேன்.

கடந்த 20.12.2013யன்று கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர். அவர்களுக்குரிய பரிசை எமது “குத்துப்பாட்டு” புகழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் வழங்கியுள்ளார்.

இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி முன்மாதிரியாக விளங்குகின்றனர். இனி மற்ற நாடுகளில் வாழும் புலத்து தமிழர்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட முனைவார்கள்.

கீழ்வரும் இணைப்பில் அந்த நிகழ்வைப் பார்வையிடலாம்.

http://www.youtube.com/watch?v=FzSnZ27Cgmc


இந்த மாதிரி நிகழ்வுகளைக் காணும்போது எனக்கு வன்னியில் உணவின்றி செத்த குழந்தைகளின் நினைவே வந்து தொலைக்கிறது. அந்த துயர சம்பவத்தை நினைவூட்டியமைக்கு மன்னிக்கவும்.

அதுமட்டுமா போராடியவர்கள் இன்று ஊனமுற்று இருப்பவர்கள் தங்கள் வாழ்வுக்கு உதவும்படி கையேந்துகிறார்கள். எமக்காகப் போராடிய அந்த உள்ளங்களுக்கு உதவாமல் இப்படியான களியாட்டங்களை செய்ய எப்படி எம்மவர்களுக்கு மனம் வருகிறது?

No comments:

Post a Comment