Wednesday, December 25, 2013

• தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா?

• தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா?
• அவர் தியாகங்கள் போற்றுதலுக்குரியது இல்லையா?
• அவருக்கு நினைவு அஞ்சலி செய்ய முடியாதா?

தமிழ்நாட்டில் இன்று பரவலாக மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யப்படுகிறது. அதில் ஈழப் போராட்டத்திற்காக உயிர் நீத்த முத்துக்குமார் ஆப்துல் ரசாக் போன்றவர்களும் நினைவு கூரப்படுகின்றனர். முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் கூட அவர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் இங்கு எமது கவலை என்னவெனில் இவர்கள் ஏன் தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகிறார்கள்?

• இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு வைத்து முதன் முதலில் அகில இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தோழர் தமிழரசன். இவர் மாவீரர் இல்லையா?

• வெறும் பேச்சளவில் நில்லாது செயலிலும் அதைக் காட்டும் வண்ணம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து அதனால் உளவுப் படையினரால் கொல்லப்பட்டவர் தோழர் தமிழரசன். அவர் தியாகம் போற்றுதலுக்குரியது இல்லையா?

• பல வருடம் சிறைத் தண்டனை. பல கொடிய சித்திரவதைகள். இருப்பினும் இறுதிவரை உறுதியாகப் போராடியவர் தோழர் தமிழரசன். அவர் நமது அஞ்சலிக்குரியவர் இல்லையா?

• முள்ளிவாயக்கால் அவலம் இந்திய அரசினால் நிகழும் என முன்கூட்டியே கூறி அதைத் தடுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவில் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் எனக் கூறி அதற்கான முயற்சிகளில் இறங்கியவர் தோழர் தமிழரசன். அவருக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஏன் இடம் இல்லை?

அன்று அப்பு பாலன்
அடுத்து புலவர், தமிழரசன்
அதையடுத்து லெனின, மாறன் போன்றவர்கள்.

இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புரட்சி வீரர்கள்.
இவர்கள் தமிழ்நாட்டின் போற்றுதலுக்குரிய மாவீரர்கள்.
இவர்களை என்றும் நினைவில் கொள்வோம்!

அவர்கள் காட்டிய பாதையில் சென்று
அவர்களது இலட்சியத்தை வென்றடைவோம்!!

No comments:

Post a Comment