Wednesday, December 25, 2013

• காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணுகிறது • சோனியா கும்பல் மக்களால் வெறுக்கப்படுகிறது • சோனியாவை நாடு கடத்த மக்கள் கோரிக்கை

• காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணுகிறது
• சோனியா கும்பல் மக்களால் வெறுக்கப்படுகிறது
• சோனியாவை நாடு கடத்த மக்கள் கோரிக்கை

பல கோடி ரூபா ஊழல் செய்த குடும்பம்!

பல்லாயிரம் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான குடும்பம்!

இந்திய மீனவர்களை கொலை செய்யும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்த குடும்பம்!

காஸ்மீரில் அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு உத்தரவு வழங்கிய குடும்பம்!

சதீஸ்கரில் ஆதிவாசிகளின் படுகொலைகளுக்கு காரணமான குடும்பம!

மணிப்பூரில் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டத்திற்கு பொறுப்பான குடும்பம்!

இத்தகைய ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் காரணமான சோனியா குடும்பம் மக்களின் வெறுப்புக்குள்ளானது ஆச்சரியமானது அல்ல. அக் குடும்பத்தை இந்தியாவை விட்டு வெளியேறு என மக்கள் கோருவதும் அதிசயம் அல்ல.

ஆனால் மக்களிடம் கொள்ளையடித்து ஊழல் மூலம் சம்பாதித்த பல கோடி ரூபா பணம் பறிமுதல் செய்ய வேண்டும். மக்களின் அழிவிற்கு காரணமான சோனியா குடும்பம் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன் பின்னரே அவர் நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

சோனியா குடும்பத்தை பலமாக ஆதரித்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அத்தகைய ஆந்திரப் பிரதேசத்திலேயே மக்கள் இன்று சொனியாவை வெளியேறு என குரல் கொடுக்கிறார்கள்.

இன்று ஆந்திராவில் ஒலிக்க தொடங்கியிருக்கும் இக் குரல் விரைவில் இந்தியா முழுவதும் ஒலிக்கும். சோனியா குடும்பம் ஓட்டம் பிடிக்கும். இது உறுதி.

No comments:

Post a Comment