Wednesday, December 25, 2013

• தொடரும் சட்ட விரோத தடுப்பு காவல்கள்

• தொடரும் சட்ட விரோத தடுப்பு காவல்கள்

சந்தேகத்தின் பேரில் 15 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. சிறையில் பிறந்த குழந்தையுமாக சேர்த்து குடும்பமே சிறையில் வாடுது. அவர்கள் இதுவரை 429 தடவைகள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்னமும் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இது குறித்து எவ்வித அக்கறையும் இன்றி நீதிமன்றமும் ஒவ்வொரு தடவையும் வாய்தாவை புதுப்பித்து வருகிறது. இது இலங்கை நீதித்துறைக்கும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு பல நீதி மறுக்கப்பட்ட சட்ட விரோத தடுப்பு காவல்கள் இலங்கையில் இருக்கின்றன.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இலங்கையில் மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் அங்கு நடப்பது அராஜகம் ஆகும்.

அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சட் விரோத தடுப்பு காவல்கள் நடக்கின்றன. தமிழ் மக்கள் மட்டுமல்ல அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற சிங்கள மக்களும் காணமல் போகின்றனர். அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி குரல் கொடுத்த லலித் குகன் ஆகிய இரு தோழர்களும் அரசால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அரசால் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விபரங்கள் வெளிப்படுத்தியும் அரசு எவ்வித பதிலும் அளிக்காது திமிராக நடந்து கொள்கிறது.

இந்த சட்ட விரோத தடுப்பு காவல்கள் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இடம்பெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரியார் திராவிடகழக தலைவர் மணி தேசியபாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார். மக்கள் ஜனநாயக குடியரசுக்கட்சி சேர்ந்த ராகினி பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார். மலைவாழ் மக்களுக்காக போராடிய மனுவேல் தேசியபாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இவ்வாறான கைதுகள் தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது கறுப்பு சட்டத்தின் ஆட்சியா என கேட்க வைக்கிறது.


தொடரும் சட்ட விரோத கைதுகளுக்கு எதிராகவும்
அராஜக ஆட்சிகளுக்கு எதிராகவும்
மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்!

No comments:

Post a Comment