Tuesday, December 31, 2013

• தமிழர்கள் இந்தியர்கள் அல்ல

• தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் ஒருமுறை இந்திய அரசு தமிழன் முகத்தில் அறைந்து கூறியிருக்கிறது.

தேவயானிக்காக அலறி துடித்த இந்திய அரசு தமிழ் பிரபாகரனுக்காக குரல் கொடுக்க மறுப்பதேன்?

தமிழ் பிரபாகரன் தமிழன் என்பதாலா? அல்லது
தமிழன் இந்தியன் அல்ல என்று இந்திய அரசு கருதுவதாலா?

இதுவரை 600 மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்து இந்திய அரசு ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிக்காதது ஏன்?

ஆனால் தமிழக மீனவனை கொல்லும் இலங்கை கடற்படைக்கு தொடர்ந்தும் பயிற்சி கொடுப்பது எதற்காக? தொடர்ந்தும் தமிழனை சுட்டுக்கொல்வதற்காகவா?

இந்த இழிவு நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு என்ன காரணம்?
தமிழர்களே சிந்திப்பீர்!

No comments:

Post a Comment