Tuesday, December 31, 2013

• தேவயானிக்காக அலறி துடிக்கும் மத்திய அரசு ஈழத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்காகத் துடிக்காதது ஏன்? கலைஞர் கேள்வி.

• தேவயானிக்காக அலறி துடிக்கும் மத்திய அரசு ஈழத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்காகத் துடிக்காதது ஏன்? கலைஞர் கேள்வி.

கலைஞர் அவர்களே!

உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கேள்வியைக் கேட்டமைக்காக உங்கள் உணர்வுகளைப் பாராட்டுகிறோம். ஆனால் அதேவேளை நாமும் ஒரு கேள்வி உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

இசைப்பிரியாவுக்காக அலறித் துடிக்கும் நீங்கள் மு.க. மணி க்காக துடிக்காதது ஏன்?

இசைப்பிரியா ஒரு ஈழத்து தமிழ் பெண். அதுபோல் மு.க. மணியும் ஒரு ஈழத்து தமிழ் சிறுவன்தானே?

ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் துடிப்பது உண்மையானால் மு.க மணிக்காக துடிக்க மறுப்பது ஏன்?

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு கண்ணீர் விட்ட நீங்கள் மு. மணி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் விட மறுப்பது என்?

அகதியாக வந்த சிறுவனை உங்கள் தத்துப்பிள்ளையாக எடுத்துக்கொண்டீர்கள். அவனுக்கு மு.க. மணி என்று பெயரும் சூட்டினீர்கள். ஆனால் அவன் உங்கள் சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவான் என அஞ்சி அவனை உங்கள் குடும்பத்தவர்களே கொன்று விட்டார்கள். இதை நாம் மட்டும் சொல்லவில்லை. உங்களுடன் இவ்வளவு காலமும் ஒன்றாக இருந்த பரிதி இளம் பரிதியே கூறுகிறார். அவர் “மணி எங்கே” என்று கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

அகதி சிறுவன் மு.க.மணிக்கு என்ன நடந்தது?
ஏன் அந்த அப்பாவி அகதி சிறுவன் கொல்லப்பட்டான்?
கொலையாளிகள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?
ஏன் அந்த சிறுவன் மரணம் குறித்து வாய் திறக்க மறுக்கிறீர்கள்?

கலைஞரே உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.
இனியும் தாமதம் செய்யாமல் உடன் பதில் தாருங்கள் கலைஞரே!

கீழ் வரும் இணைப்பில் பரிதியின் பேட்டியை படிக்கலாம்.

http://tamilworldtoday.com/archives/21181

No comments:

Post a Comment