Wednesday, December 25, 2013

• தாய்!

• தாய்!

மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது புரட்சி மணி என்ற தோழர் “தாய்” என்னும் ரஸ்சிய நாவலை எனக்கு படிக்க கொடுத்தார். அதை நான் இரண்டு முறை வாசித்தேன். எனது நீதிமன்ற வாக்கு மூலத்தில் கூட அந்த நாவலின் சில வரிகளை பயன்படுத்தினேன். அந்த நாவல் புகழ்பெற்ற மாக்சிம் கார்க்கியின் படைப்பாகும். அது சிறைப்படுத்தப்பட்ட பாவல் என்ற இளைஞனின் விடுதலைக்கு அவனது தாய் பாடுபடுவதே கதையாகும். இந்த நாவல் எமது போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் போராளிகளுக்கு படிப்பதற்கு கொடுக்கப்பட்டது.

சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் பாடுபடுவதை அறியும்போதெல்லாம் எனக்கு இந்த “தாய்” நாவலே ஞாபகம் வருகிறது. எதிர்காலத்தில் இவரது கதையும் நிச்சயம் போராளிகளுக்கு ஒரு உந்துதலாக அமையும்.

பேரறிவாளன் ஏன் விடுதலை செய்யப்படவேண்டும்?

• கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த சங்கராச்சாரிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் பற்றரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இதுதான் இந்திய நீதித்துறையின் லட்சணம்!

• விசாரணை செய்த அதிகாரியே தான் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்தினேன் என்று கூறிய பின்னரும்கூட பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை. அது குறித்து விசாரிக்கப்படும் என்றுகூட நீதித்துறை இதுவரை கூறவில்லை.

• ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்டக்கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் இலட்சியம் எனில் அப்பாவியான பேரறிவாளனை எப்படி தண்டிக்கலாம?

• சோனியா குடும்பத்தை திருப்பதிப்புடுத்துவதற்காக ஒரு அப்பாவி பலிகடாவாக்கப்படுகிறார். காங்கிரஸ் அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய மறுக்கிறது.

ஆனால் காலம் மாறும். அன்று மக்கள் மன்றத்தில் இவ் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
அப்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்.

ஆம்! வரலாறு அவரை விடுதலை செய்யும்! இது உறுதி!!

No comments:

Post a Comment