Tuesday, April 30, 2013

குவான்டனமோ சிறையில் 166 சிறைவாசிகள் 45 நாட்களாக உண்ணாவிரதம்.


• குவான்டனமோ சிறையில் 166 சிறைவாசிகள் 45 நாட்களாக உண்ணாவிரதம்.

போஸ்டன் குண்டுவெடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் ஏன் இந்த சிறைக் கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியிட மறுக்கின்றன?

இந்திய அரசுக்கு ஒரு சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்!
அமெரிக்க அரசுக்கு ஒரு குவான்டனமோ என்னும் சித்திரவதை முகாம்.

சாகர் ஆமீர் (வயது-44) கடந்த 11 வருடங்களாக இச் சிறையில் அடைத்து வைத்து மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார். இவர் நிரபராதி என இரண்டு தடவை நிரூபணமாகியும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இவர் வெளியில் வந்தால் ஈராக் மீதான அமெரிக் போர் குறித்த பல உண்மைகள் வெளியில் வந்துவிடும் என்பதற்காகவே அவர் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

உலகிற்கு ஜனநாயகம, மனிதவுரிமை பற்றி போதிக்கும் அமெரிக்க அரசு தான் சட்டவிரோத சிறைச்சாலைகளை பல நாடுகளில் பேணுவதும் அதில் பல அப்பாவி முஸ்லிம்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்வதும் நடக்கின்றது. இது பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவருகின்றன. ஆனால் இது குறித்து பரவலான கண்டனம் மக்களால் தெரிவிக்கப்படாமை மிகவும் துரதிருஸ்டமே!

இன்று பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சித்திரவதை செய்யப்படும்போது நாம் குரல் கொடுக்க தவறினால், நாளை நாம் கைது செய்யப்படும்போது எமக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

“அவர்கள் முதலில் கம்யுனிஸ்ட்டுகளை கைது செய்தார்கள்
நான் மௌனமாக இருந்தேன்- பின்னர்
அவர்கள் யூதர்களை கைது செய்தார்கள்
நான் மௌனமாக இருந்தேன்- இறுதியில் அவர்கள்
என்னை கைது செய்ய வந்தார்கள்.
எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை.”
இது கிட்லரின் சர்வாதிகார கொடுமை குறித்த கவிதை வரிகள். இவ் வரிகள் இன்றும் பொருத்தமாகவே இருக்கின்றது.

குவான்டனமோ சிறைக் கொடுமை பற்றிய மேலதிக விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை பார்க்கவும்.
http://www.dailymail.co.uk/news/article-2312284/Shaker-Aamer-Hes-cleared--devastating-secret-MI6-Iraq-invasion-means-freed.html

No comments:

Post a Comment