Tuesday, April 30, 2013

ம.க.இ.க நடத்தும் டி.ஜி.பி அலுவலக முற்றுகைப் போராட்ம் வெற்றி பெறவேண்டும் ! அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!


 இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமே கொந்தளிக்கிறது. ஆனால் அதே தமிழகத்தில் தமிழ் அகதிகளை அடைத்து வைத்து கொடுமைப் படுத்தும் சிறப்பு முகாமும் இருக்கிறது.

• தமிழீழ வாக்கெடுப்பிற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் ஜெயா அம்மையார் அகதிகளை தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்.

• இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என வலியுறுத்தும் கலைஞர் சிறப்பு முகாமை மூடும்படி கேட்க மறுக்கிறார்.

• சிங்கள கிரிக்கட் வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர, புத்த பிக்குவை விரட்டி விரட்டி அடிப்போர், ஏனோ சிறப்பு முகாமிற்கு எதிராக போராட்டம் நடத்த தயங்குகின்றனர்.

• தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் இருக்கும்வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வேறு எந்த போராட்டத்தையும் எந்தவொரு ஈழத்தமிழனும் நம்பப்போவதில்லை.

ம.க.இ.க நடத்தும் டி.ஜி.பி அலுவலக முற்றுகைப் போராட்ம் வெற்றி பெறவேண்டும் !
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!
சிறப்பு முகாமிற்கு எதிராக போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!

No comments:

Post a Comment