Tuesday, April 30, 2013

இலங்கை இனப்பிரச்சனைக்கு பொருத்தமான ஒரு தீர்வாக தற்கால சூழலில் அமையும் என்றே டெலோ இயக்கம் கருதுகிறது. – செல்வம் அடைக்கலநாதன்


இலங்கை என்ற ஒரு ஜக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கு என ஒரு தனியாக சுயாட்சி கட்டமைப்பை உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்கு பொருத்தமான ஒரு தீர்வாக தற்கால சூழலில் அமையும் என்றே டெலோ இயக்கம் கருதுகிறது. – செல்வம் அடைக்கலநாதன்

குட்டிமணி தங்கத்துரை ஆகியோரால் ஆரம்பிக்கப்ட்டு இதுவரை காலமும் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போராடி வந்த “டெலோ” இயக்கத்தின் தற்பொதைய தலைவர் செல்வம் அடைகலநாதன் அவர்கள் தாங்கள் தமிழீழ கோரிக்கையைக் கைவிட்டு சுயாட்சி கோரிக்கையை முன்வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்ப்பட்டு ஆதரவு தரப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் த.வி.கூ தலைவர் சம்பந்தன் அவர்கள் எற்கனவே தாம் தமிழீழ கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது அதில் அங்கம் வகிக்கும் இன்னொரு அமைப்பான டெலோ இயக்கத்தின் தலைவர் தமிழீழத்தை கைவிட்டு சுயாட்சி கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் அதில் இருக்கும் ஈபி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இதே கருத்தையே கொண்டிருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் அதுவும் தமிழ்நாட்டில் தமிழீழத்திற்காக மாணவர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், தாம் தற்போதைய சூழலை நன்கு கணித்தே இவ்வாறு கோரிக்கையை முன்வைப்பதாக செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ கோரிக்கையை கைவிட்டுவிட்டனர் என குற்றம்சாட்டி இவர்களில் இருந்து பிரிந்து சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன், பொன்னம்பலம் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால் மக்கள் இவர்களுக்கு படுதோல்வியை அளித்து தமிழீழத்தை கைவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அமோக ஆதரவளித்தனர்.

எனவே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக தமிழீழ கோரிக்கையை எழுப்பும் தமிழ்நாட்டு தலைவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கீழே உள்ள படம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம் ஆகும்.

No comments:

Post a Comment