Tuesday, April 30, 2013

ஜெயா அம்மையாரின் சுயரூபம் காண்பீர்!


• சட்டசபையில் தமிழீழ வாக்கெடுப்பிற்கு பிரகடனம்.

• சிறப்புமுகாமில் சட்டவிரோத அட்டூழியங்கள்.

• ஜெயா அம்மையாரின் சுயரூபம் காண்பீர்!

தமக்கு வழங்கப்படும் வேதனம் போதாது என்றும் அதனை அதிகரித்து வழங்குபடி கோரி பூந்தமல்லி சிறப்பு அகதிமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது கணவனை பார்க்க வந்த அகதிப் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்ட்டுள்ளது. இதனால் அப் பெண் தனது இரு பிள்ளைகளுடன் பார்க்க அனுமதிகோரி முகாம் வாசலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளார். சட்டரீதியான, நியாயமான அவரது கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த தமிழக அரசு அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. இதனை அறிந்த கணவர் வேதனை தாங்காது சிறப்புமுகாமில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயா அம்மையார் ஒருபுறம் சட்டசபையில் பிரகடனம் செய்து தான் ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ளவர் என காட்டிக்கொண்டு மறுபுறத்தில் தொடர்ந்தும் அகதிகளை துன்புறுத்தி வருகிறார். அவரின் சுயரூபம் ஈழத்தமிழர்களுக்கு நன்கு தெரியும். அனால் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் வைகோ அவர்கள் இது நன்கு தெரிந்தும் “விடியலின் வெளிச்சம” என ஜெயா அம்மையாரைப் பாராட்டுவது வியப்பாக இருக்கிறது.

மாணவர்களே!

தமிழ்நாட்டில் அகதிகள் துன்புறுத்தப்படும்போது அது குறித்து எதுவும்கோராது மறுபுறத்தில் மகிந்தவின் கொடுமைக்கு எதிராக நீங்கள் போராடுவது அர்த்தமுள்ளதாக இருக்காது. எனவே முதலில் தமிழ்நாட்டில் அகதிகளை அடைத்து வைக்கும் சிறப்பு முகாம்களை மூடுவதற்கு போராடுங்கள்.

No comments:

Post a Comment