Tuesday, April 30, 2013

பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான பெருவெடிப்பிற்கு கடவுள் காரணமல்ல. பேராசிரியர்- ஸ்டீபன் கேவ்கிங்.


• பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான பெருவெடிப்பிற்கு கடவுள் காரணமல்ல. பேராசிரியர்- ஸ்டீபன் கேவ்கிங்.

கடந்தவாரம் அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர். மண்டபத்தில் இடம் போதாமல் வெளியில் நின்று கொண்டும் அவரது பேச்சை செவிமடுத்தனர்.

உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே. ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார்.

இது பற்றிய விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் லிங்கை பார்க்கவும்.

http://www.dailymail.co.uk/news/article-2311168/Stephen-Hawking-says-The-Big-Bang-didnt-need-God-set-off.html

அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லா விடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது.

இலங்கை, இந்திய நாடுகளில் பாடசாலைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகம். பல்கலைக்கழகங்களைவிட கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். இதுவே மக்களின் அறியாமைக்கும் மதங்களினது ஆதிக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பகுத்தறிவு பெற வைப்பதே இந்த அறியாமையிலிருந்து விடுபட ஒரே வழியாகும்.

மீண்டும் ஒரு “பெரியாருக்காக” தமிழ் உலகம் காத்து நிற்கின்றது!

No comments:

Post a Comment