Tuesday, May 28, 2013

ஹைதி நாட்டினர் பணத்தை திருப்பி தர முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி

ஹைதி நாட்டினர் பணத்தை திருப்பி தர முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி

பிரெஞ்சு அரசு,கடந்த 1825 முதல் 1946 வரை ஹைதி நாட்டினரை அடிமையாக்கி கொடுகோல் ஆட்சி புரிந்துள்ளது.
ஹைதி நாட்டினரின் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவர்களிடமிருந்து சட்டத்திற்கு விரோதமாக 21 பில்லியன் டொரை பிரான்ஸ் அரசு பறித்து விட்டது.

தற்பொழுது மிகவும் ஏழ்மை நாடாக இருக்கும் ஹைதிக்கு அந்த தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

ஆனால் இந்த வழக்கிற்கு பதிலடி கொடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி, ஹைதி நாட்டினருக்கு நடந்தது நடந்தது தான். அந்த வரலாற்றை அழித்து எழுத முடியாது என்று அடிமைத் தன நினைவு நாள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

பிரான்ஸ் அரசு, ஹைதி நாட்டினரிடமிருந்த பெற்ற தொகை அரசு வங்கியான சி.டி.சி வங்கியில் இருப்பாக வைத்துள்ளது.

ஹைதியில் அடிமை வியாபாரம் செய்த போது, கிடைத்த பணத்தை எல்லாம் பிரான்ஸ் அரசு சி.டி.சி வங்கியில் தான் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment