Tuesday, May 28, 2013

• “எல்லா உயிர்களிமும் அன்பு செலுத்துங்கள், தமிழனைத் தவிர”- (சிங்கள) புத்த பெருமா

• “எல்லா உயிர்களிமும் அன்பு செலுத்துங்கள், தமிழனைத் தவிர”- (சிங்கள) புத்த பெருமான்

சிங்கள பிக்கு தீக்களிப்பு

இலங்கையில் கண்டி தலதா மாளிகை- பௌத்த விகாரைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்துக் கொண்டுள்ளார்.ஆடு, மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பிக்கு தன்மீது பெற்றோலை ஊற்றி எரித்துக்கொண்டுள்ளார்.

மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான அவரை அருகில் நின்றவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அவர் பின்னர் கொழும்பு தேசிய மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அதேபோல ஆடு, மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சில பௌத்த அமைப்புகள் குரல் கொடுத்துவந்துள்ளன.

அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது.
பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான இன்று வெள்ளிக்கிழமை பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாயக்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஒரு உயிர் கொல்லப்படுகிறதே என்றோ அல்லது சித்திரவதை செய்யப்படுகிறதோ என்று ஒரு பிக்குவும் தீக்குளிக்கவில்லை. கண்டிக்கவும் இல்லை. ஆனால் இப்போது இந்து ஆலயங்களில் நடக்கும் மிருக பலிக்கும, முஸ்லிம்கள் சாப்பாட்டிற்காக மாடுகளை வெட்டுவதையும் எதிர்ப்பதற்காக உயிர்வதைகளுக்கு எதிராக தீக்குளிப்பதாக கூறுவதைப் பார்க்கும்போது ஒருவேளை புத்தர் “எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், தமிழனையும் முஸ்லிமமையும் தவிர” என்று கூறியிருப்பாரோ என நினைக்க தோன்றுகிறது.

No comments:

Post a Comment