Tuesday, May 28, 2013

செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ. ராமையா காலமானார்

செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ. ராமையா காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ. ஏ. ராமையா காலமானார்.சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார்.

ஓ.ஏ. ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938-ம் ஆண்டில் பிறந்தார்.

ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது.

செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ. ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார்.
இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.

No comments:

Post a Comment