Wednesday, December 31, 2014

டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்
இலங்கையில் மாசேதுங் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் தோழர் சணமுகதாசன் அவர்களும் அவரது தலைமையில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியுமே.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தது மகத்தான மாசேதுங் சிந்தனைகளே.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்யவும் பெரும் பங்கு வகித்தது மாசேதுங் சிந்தனைகளே.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை இலங்கைஅரசு “பயங்கரவாதிகள்” என்றழைத்தது. தமிழர்விடுதலைக்கூட்டணி “பொடியன்கள்” என்றழைத்தது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவரான தோழர் சண்முகதாசனே தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தவர்.
அதுமட்டுமல்ல அவர் இதை ஜந்து கட்சி கூட்டத்தில் சிங்கள தலைவர்கள் மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
யாழ்குடாநாட்டில் இருந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மாவோயிச சிந்தனைவாதிகளே.
இலங்கையில் மாவோயிஸ்ட்டுகள் எதுவும் செய்யவில்லை என்று இன்று பேசுவோர் இவ் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment