Wednesday, December 31, 2014

செய்தி- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்- வைகோ வேண்டுகோள்.

செய்தி- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்- வைகோ வேண்டுகோள்.
வைகோ அவர்களே!
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மரணம் தொடர்பான உண்மைகள் வெளியிடப்பட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானதே. அதேபோல் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளையும் தாங்கள் நியாயமாக வெளியிட வேண்டும் அல்லவா!
பிரபாகரன் இருக்கிறார். அவர் மீண்டும் வந்து தமிழீழம் பெற்று தருவார் என்று எப்படி உங்களால் தொடர்ந்து கூறமுடிகிறது?
பிரபாகரன் இருக்கிறார் என்று தாங்கள் கூறுவதன் மூலம் அவர் மரணத்தில் இந்திய அரசின் பங்களிப்பை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வதை தடுக்கிறது அல்லவா?
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது அவர் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் ஆயிரக் கணக்கான மக்களை எல்லாம் பலி கொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பியோடிய ஒருவர் என்ற அவமானத்தை கொடுக்கிறது அல்லவா?
இறுதி கணம்வரை உங்களை நம்பிய பிரபாகரனுக்கு துரோகம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் இடங்கொடுக்கிறது?
தயவு செய்து இனியாவது மக்கள் முன் பிரபாகரன் பற்றிய உண்மைகளை கூறிவிடுங்கள். தொடர்ந்து பொய் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்.

No comments:

Post a Comment