Tuesday, December 9, 2014

பாபர் மசூதியை இடித்தவர்கள் தண்டிக்கப்படுவது எப்போது?

பாபர் மசூதியை இடித்தவர்கள் தண்டிக்கப்படுவது எப்போது?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள்.
பாபர் மசூதியை இடித்தவர்கள் தண்டிக்கப்படாமல் தாமதிக்கப்படுவது
குஜராத்தில் முஸ்லிம்களை அழித்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பது
காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்கள் தொடர்ந்து கொல்லப்படுவது
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவே அர்த்தமாகும்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள்
அங்கு சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறார்கள்
ஆனால் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுவது என்ன நியாயம்?
தனது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு நியாயம் வழங்காத மோடி
ஈழத் தமிழர்களுக்கு நியாயம் வழங்குவார் நம்புங்கள் என்கிறார்கள்.
ஆனால் அவரோ மகிந்த வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறார்.
மகிந்த ராஜபக்சவுக்கு செங்கள வரவேற்பு கொடுக்கிறார்
இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களை நம்பி ஏமாறுவது?
இன்னும் எத்தனை நாளைக்கு இவர்கள் ஏமாற்ற அனுமதிப்பது?
சிந்தியுங்கள் மக்களே!
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்!

No comments:

Post a Comment