Wednesday, December 31, 2014

இயேசு பிரானே!

இயேசு பிரானே!
இவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள்.
இவர்கள் பாவங்களை மன்னிக்காதீர்கள்!
முள்ளிவாய்க்காலில் 40 அயிரம் அப்பாவி மக்களை கொன்ற மகிந்தவின் இரத்தம் தோய்ந்த கைகளை கொஞ்சம்கூட கூச்சமின்றி குலுக்கிறார் பாப்பரசர்.
அதுமட்டுமன்றி இலங்கைக்கு விஜயம் செய்து மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு உதவவும் விரும்புகிறார்.
ஜ.நா மனிதவுரிமைக் கமிசனே மகிந்தவை போர்க்குற்றவாளி என்று விசாரிக்க விரும்புகிறது. ஆனால் பாப்பரசர் மகிந்தவுக்கு உதவுகிறார் எனில் என்ன அர்த்தம்?
மகிந்த ராஜபக்ச கிருத்தவ தந்தை கருணாகரன் அடிகளாரைக் கொன்றார்.
பல கிருத்தவ தேவாலயங்கள் மீது குண்டு வீசினார்.
இன்றும்கூட ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட தமிழ் பெண்ணுக்காக நியாயம் கேட்ட மன்னார் ஆயர் மிரட்டப்படுகிறார்.
இத்தனைக்கும் பிறகும் மகிந்தவுக்கு பாப்பரசர் உதவ விரும்புகிறார் எனில் அவரும் அறிந்தே பாவம் செய்கிறார் அல்லவா?

No comments:

Post a Comment