Tuesday, December 9, 2014

செத்தவர்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தமிழ் மக்களுக்கு வழங்குவேன்- மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவிப்பு

செத்தவர்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தமிழ் மக்களுக்கு வழங்குவேன்- மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!
முதலில்
• காரைநகரில் தமிழ் மாணவியை கற்பழித்த கடற்படை வீரர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவும்.
• நெடுங்கேணியில் சிறுமியை கற்பழித்த ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கவும்.
• மன்னாரில் சிறுமியை கற்பழித்த ராணுவம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய மன்னார் ஆயரை மிரட்ட வேண்டாம் என்று கோத்தபாயாவிடம் கூறவும்.
• கிளிநொச்சியில் கைது செய்த ஜெயக்குமாரி எந்த குற்றச்சாட்டும் இன்றி கடந்த 6 மாதமாக காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும்.
• தமது பிள்ளைகளை தேடும் தாய்மாரை புலனாய்வு பொலிஸ் மூலம் மிரட்டுவதை விடுத்து அவர்களுக்கு தக்க பதில் வழங்குங்கள்.
• யுத்தம் முடிந்து 5 வருடமாகிவிட்டது. இனியாவது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யவும். இல்லையேல் அவர்களது வழக்கை விசாரணைக்காவது எடுக்கவும்.
• ராணுவத்திற்காக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துங்கள். இனியாவது வலிகாமம் மக்களை மீள் குடியேற்றம் செய்யுங்கள்.
மேற்கண்டவை யாவும் உங்களால் உடனே செய்யக்கூடியவை.
தேர்தலுக்காக இதையாவது உங்களால் செய்ய முடியுமா?

No comments:

Post a Comment