Wednesday, December 31, 2014

• ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

• ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!
பாகிஸ்தான் குழந்தைகளுக்கு ஒரு நியாயம்!
செஞ்சோலை குழந்தைகளுக்கு இன்னொரு நியாயம்?
இது என்ன நியாயம் ஜனாதிபதி அவர்களே?
செஞ்சோலையில் குழந்தைகளை கொன்ற நீங்கள்
பாகிஸ்தான் குழந்தைகள் கொலையை கண்டிப்பது
கசாப்பு கடைகாரன் காருண்ய மாநாடு நடத்துவது போல் இருக்கிறது!
செஞ்சோலையில் இருந்த குழந்தைகளை குண்டு வீசிக் கொன்ற உங்களால் எப்படி கொஞ்சம்கூட கூச்சமின்றி பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக கண்டனம் செய்ய முடிகிறது?
இதைவிட “இலங்கை ராணுவம் எந்த பொது மகனையும் கொல்லவில்லை” என்று வேறு அண்மையில் கூறியுள்ளீர்கள்.
அப்படியென்றால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40ஆயிரம் அப்பாவி தமிழர்களும் தங்களைத் தாங்களே சுட்டு இறந்தார்களா?
1989ல் 60 ஆயிரம் சிங்கள மக்களை கொன்றது ராணுவம் என்றும் அதற்கு எதிராக ஜ.நா வரை சென்று மனுக் கொடுத்தீர்களே! அதை மறந்துவிட்டீர்களா?
அல்லது அத்தனை பேரும் முள்ளிவாய்க்கால் தமிழர்கள்போல் தங்களைத் தாங்களே சுட்டு இறந்தவர்கள் என இப்போது கண்டு பிடித்திருக்கிறீர்களா?
1971ல் 4ஆயிரம் ஜே.வி.பி இளைஞர்களை கொன்றது யார்? அவர்களும் தாங்களாகவே இறந்தவர்களா?
கதிர்காமத்தில் மன்னம்பெரி என்ற யுவதியை பாலியல் வல்லுறவு செய்து பெண் உறுப்பில் குண்டை வெடிக்கவைத்து கொலை செய்தவர் யார்?
அவரே தன்னை பாலியல் வல்லுறவு செய்து அவரே தன் உறுப்பில் குண்டை வெடிக்கவைத்தாரா?
வரவர உங்கள் நகைச்சுவைக்கு அளவேயில்லாமற் போய்விட்டது ஜனதிபதி அவர்களே!
இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக உங்களின் இந்த பேச்சு அமைந்துவிட்டது.
இதற்குரிய பரிசை மக்கள் உங்களுக்கு ஜனவரி 8ம் திகதி கண்டிப்பாக தருவார்கள்.

No comments:

Post a Comment