Tuesday, December 9, 2014

செய்தி- வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் கோரிக்கைகு ஏற்ப அகதிகளை திருப்பி அனுப்பக்கூடாது – காசி ஆனந்தன் வேண்டுகோள்.

செய்தி- வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் கோரிக்கைகு ஏற்ப அகதிகளை திருப்பி அனுப்பக்கூடாது – காசி ஆனந்தன் வேண்டுகோள்.
அய்யா காசி ஆனந்தன் அவர்களே!
• அகதிகளை திருப்ப அனுப்பக்கூடாது என கோரும் நீங்கள்
இந்த அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக
இதுவரை ஒருநாளாவது குரல் கொடுத்தது உண்டா?
• உங்கள் மகளுக்கு மருத்து கல்வி கற்ற அனுமதி பெற்ற நீங்கள்
அகதி நந்தினிக்கு அனுமதி பெற்றுக் கொடுக்காதது ஏன்?
• நீங்களும் அகதியாகத்தானே தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள்.
உங்கள் மகளுக்கு மருத்து கல்வி கற்க அனுமதி வழங்கிய தமிழக அரசு ஏழை நந்தினிக்கு மட்டும் மறுப்பது என்?
• அந்தக் காலத்தில் பாலு மகேந்தராவை சயிக்கிளில் ஏற்றிச் சென்று பாடசாலைக்கு குண்டு எறிந்தாக அறிக்கை விட்ட நீங்கள். இந்த அகதிகளின் கல்விக்காக தற்போது குண்டெறியாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே?
• கை, கால் ஊனமுற்றவர்களைக்கூட சிறப்பு மகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. அந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி எப்போதாவது கோரியிருக்கிறீர்களா?
• ஆட்டோ ஓட்டிப் பிழைக்கலாம் என்றால்கூட ஒரு அகதி தமிழ்நாட்டில் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை . ஆனால் நீங்களோ இவை எதற்கும் குரல் கொடுக்காமல் அகதி தமிழ்நாட்டிலே தொடர்ந்து இருக்க வேண்டும் என கோருகிறீர்கள். இது என்ன நியாயம்?
• இனியாவது தயவு செய்து அகதிகளுக்கு உண்மையாக குரல் கொடுக்கவும்.
இப்படிக்கு
உங்களை இன்னமும் நம்பும்
ஒரு அப்பாவி அகதி

No comments:

Post a Comment