Thursday, April 30, 2015

தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்.

• தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்.
14.04.2015 யன்று தோழர் தமிழரசனின் 70வது பிறந்த தினம்.
மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனை வழிகாட்டலில்
தமிழ்நாடு விடுதலைக்காய் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த
தோழர் தமிழரசன் அவர்களின் 70வது பிறந்த தினம்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் “முருகன் முப்பாட்டன்” என்று கூறி காவடி தூக்க வில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலைக்காக மிசின்கன் துப்பாக்கி தூக்கியவர்.
தோழர் தமிழரசன் ஒருபோதும் முதலமைச்சர் கனவு காணவில்லை. மாறாக தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தவர்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment