Thursday, April 30, 2015

எஙகள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே - பாரதிதாசன்

• எஙகள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
- பாரதிதாசன்
20 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு 
இந்திய அரசுக்கு எதிராக, தமிழக தமிழர்களுக்கு ஆதரவாக
லண்டலில் ஒலித்த குரல்கள்!
இதுவரை, ஈழத் தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள்
தீக்குளித்தார்கள், சிறை சென்றார்கள்
பகிஸ்கரித்தார்கள், ஊர்வலம் சென்றார்கள்.
பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று, தமிழக தமிழர்களுக்காக
முதல் முறையாக லண்டன்வாழ் ஈழத் தமிழர்கள்
குரல் கொடுத்துள்ளார்கள்.
நல்ல மாற்றம். வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.
இந்த மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே
இந்திய அரசம் அதன் உளவுப்படைகளும் செயற்பட்டன.
ஆனால் அதையும் மீறி தமிழ் இனம் ஒன்றாக ஜக்கியமாகிறது.
இனி உலகில் எந்த மூலையில் தமிழன் தாக்கப்பட்டாலும்
உலகில் உள்ள தமிழன் எல்லாம் ஒன்றாக குரல் கொடுப்பான்
இந்த நிலை கண்டு பகைவர் இனி கலக்கமடைவர் என்பது உறுதி.
கொல்லப்பட்டது 20 மாடுகளாக இருந்திருந்தால்
பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருப்பார்.
கொல்லப்பட்டது 20 இந்துக்களாக இருந்தும்கூட
தமிழர்கள் என்பதால் இந்து அமைப்புகள் கண்டு கொள்ளவில்லை.
ஆந்திராவில் இருக்கும் தனது திராட்சை தோட்டத்திற்காக
“மக்கள் முதல்வர்” ஜெயா அம்மையார் மௌனம் காக்கிறார்.
வெளி மாநிலங்களில் இருக்கும் சன் டிவி சொத்துகளுக்காக
ஊழல் பேர்வழி கலைஞர் கண்டிக்காமல் இருக்கிறார்.
ஆனால் லண்டனில் இருந்தாலும் தமிழ் இன உணர்வில்
ஈழத் தமிழர் வலியுடன் குரல் கொடுக்கின்றனர்.
தமிழர்களின் இந்த ஒற்றுமை இந்திய அரசை மட்டுமல்ல
இந்திய அரசுக்கு துணை போகும் கலைஞர் ஜெயா கும்பல்களையும்
விரைவில் தூக்கியெறியும். இது உறுதி.

No comments:

Post a Comment