Thursday, April 30, 2015

“மெண்டல்” பத்மநாதனும் இந்திய அமைதிப்படையும்

 “மெண்டல்” பத்மநாதனும் இந்திய அமைதிப்படையும்
இந்தியாவில் நிர்வாணமாக திரிபவர்களை சாமியார் என வணங்கும் இந்திய படைகள் இலங்கையில் நெல்லியடி என்னும் இடத்தில் நிர்வாணமாக திரிந்த மனநோயாளி பத்மநாதனை புலிகளின் தளபதி என்று சுட்டுக்கொன்ற கொடுமையை என்னவென்று அழைப்பது?
“அமைதிப்படை” என்று இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் ஒரு நாள் நெல்லியடியில் பத்தமநாதன் என்பவரை சுட்டுக்கொன்றுவிட்டு புலிகளின் மிகப்பெரிய தளபதியை கொன்றுவிட்டதாக தொலைக்காட்சியில் கூறினார்கள்.
இதைக் கேட்டு கரவெட்டி மக்கள் சிலர் சிரித்தார்கள். இன்னும் சிலர் பத்மநாதனுக்காக வருந்தினார்கள். ஏனெனில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்தமநாதன் என்பவர் நெல்லயடி சந்தியில் பல வருடங்களாக நிர்வாணமாக திரிந்த ஒரு மனநோயாளி என்பது அந்த மக்கள் அனைவரும் அறிந்ததே!
நெல்லியடியில் 1980களில் பத்மநாதனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நிர்வாணமாக திரிந்தார். ஆனால் நல்லவேளை இந்தியாவில் போன்று அவரை சாமியார் என்று யாரும் வணங்கவில்லை. பூஜிக்கவில்லை.
அந்த காலத்து பிரபல நடிகை சரோஜா தேவியை நினைத்து பையித்தியமானவர் என சிலர் கூறினார்கள். அதற்கு ஏற்ப அவரும் “நதி எங்கே போகிறது கடலை தேடி. நான் ஏங்கே போகிறேன?; சரோஜா தேவியை தேடி” என்று பாடிக்கொண்டு திரிபவர்.
“செல்லமுத்து” புடவைக்கடை முதலாளி அவ்வப்போது புது லுங்கி கட்டி விடுவார். இன்னும் சில அக்கறை உள்ளவர்கள் முடி வெட்டி எண்ணெய் வைத்து விடுவார்கள். “சங்குணி” கடை முதலாளி மிஞ்சும் உணவுகளை அளித்து வந்தார்.
“ஒப்பிரேசன் லிபரேசன்” நடந்தபோதுகூட இலங்கை ராணுவம் அவரை கொல்லவில்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் அவரை சுட்டுக்கொன்றது மட்டுமல்ல அவரை புலிகளின் தளபதி என்று கூசாமல் பொய் வேறு சொன்னார்கள்.
ராஜீவ்காந்தியைக் கொன்று விட்டார்களே என்று கண்ணீர் வடிப்போர் ராஜீவ் காந்தியின் அமைதிப்படையால் கொல்லப்பட்ட பத்மநாதன் போன்றோருக்காக கண்ணீர் வடிப்பார்களா?

No comments:

Post a Comment