Thursday, April 30, 2015

கனடா வாழ் சீக்கியர்களின் உணர்வு கனடா வாழ் தமிழர்களுக்கு வருமா?

• கனடா வாழ் சீக்கியர்களின் உணர்வு
கனடா வாழ் தமிழர்களுக்கு வருமா?
இந்திரா காந்தி கொலையை அடுத்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்கு நீதி வழங்குமாறு கோரி உலகில் உள்ள சீக்கியர்கள் எல்லாம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பிரதமர் மோடி சீக்கிய படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரியிருந்தும்கூட கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு சீக்கியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கனடா சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அங்குவாழும் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் கனடா வாழ் தமிழர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்துள்ளனர்.
சிலர் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். சிலர் அவருடன் விருந்துண்ண போட்டி போட்டுள்ளனர்.
என்னே வெட்கம்! இப்படியுமா நமது ஆட்கள் கனடாவில் இருக்கிறார்கள்?
இந்திய அரசு எமது மக்களை, எமது விடுதலைப் போராட்டத்தை அழித்தது. அதனை மறந்து எப்படி இவர்களால் வரவேற்பு அளிக்க முடிகிறது?
அமைதிப்படையை அனுப்பியது தவறு என்று முன்னாள் இந்திய இராணுவ தளபதியே கூறுகிறார். இருந்தும் இந்திய பிரதமர் இன்னும் அமைதிப்படையால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்ற மகிந்த ராஜபக்சவுக்கு மோடி வரவேற்பளிக்கிறார். அவருடன் கை குலுக்கிறார். ஆனால் மோடி யாழ்ப்பாணம் சென்றபோதும்கூட சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் இங்கிலாந்து பிரதமர் அவ் மக்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
இன்றும்கூட தமிழின அழிப்புக்கு மோடி துணை போகிறார். மாடுகளை கொல்லக்கூடாது என்று பேசும் மோடி ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.
மோடியை பொறுத்தவரையில் ஒரு மாட்டின் பெறுமதியைக்கூட தமிழர்களுக்கு வழங்க தயாரில்லை.
இத்தனைக்கும் பிறகும் அந்த மோடியுடன் கனடா வாழ் தமிழர்களால் எப்படி கைகுலுக்க முடிகிறது?
இதுவரை இந்தியாவால் பலியான தமிழர்கள்
இந்த தமிழர்களின் தவறுகளை மன்னிப்பார்களாக!
இனியாவது இவர்கள் தமிழின உணர்வு பெறுவார்களா?

No comments:

Post a Comment