Thursday, April 30, 2015

ஜெயா அம்மையார் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் .

 ஜெயா அம்மையார் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் .அது ஊழல் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
பாவாணி சிங் நியமனம் முறைகேடானது என்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆனால் மறு விசாரணை தேவையில்லை என விசித்திரமான தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயா அம்மையாரை விடுவிக்க உச்சி குடுமி மன்றமும் தன்னால் இயன்ற அனைத்து வழிகளையும் மேற்கொள்கிறது.
ஒரு ரூபா சம்பளம் வாங்கிய ஜெயா அம்மையார் 4 ஆயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்தது அப்பட்டமான ஊழல் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் உச்ச நீதிமன்றம் முதல் பி.ஜே.பி மோடி வரை அனைவரும் ஜெயா அம்மையாரின் விடுதலைக்கு வழி தேடுகிறார்கள்.
மக்கள் விருப்பத்திற்கு மாறாக, நீதிக்கு புறம்பாக ஜெயா அம்மையார் விடுதலை செய்யப்படுவாரேயானால் எதிர் காலத்தில் 2ஜி ஊழல் கருணாநிதி கும்பல் தண்டிக்கப்பட முடியாமல் போகும்.
அது மட்டுமல்ல மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.
எனவே ஊழல் குற்றவாளி ஜெயா அம்மையாருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவர் அரசியலில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
2ஜி ஊழல் பேர்வழிகளான கருணாநிதி குடும்பமும் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் 6 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட வேண்டும்.
இது மற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும்.
பரந்துபட்ட தமிழ் மக்களின் விரும்பமும் இதுவேயாகும்

No comments:

Post a Comment