Thursday, April 30, 2015

நோர்வேயில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு

 நோர்வேயில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு
"ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று!"
- பாரதியார்.
வழக்கம்போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இலக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலக்கிய சந்திப்பு படங்களைப் பார்க்கும்போது பாரதியாரின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகிறது.
44வது இலக்கிய சந்திப்பு இது. நோர்வே யில் ஒஸ்லோவில் 4ம் 5ம் தேதிகளில் நடைபெற்றுள்ளது.
காத்திரமான தலைப்புகள் விரிவான உரையாடலுக்காக தரப்பட்டுள்ளன.
நிச்சயம் சிறந்த ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற்றிருக்கும் என நம்பலாம்.
நண்பர் சரவணன் இலக்கிய சந்திப்பு படங்கள் பகிர்ந்துள்ளார். பாராட்டுக்கள்.
அதுபோல் உரையாடல்கள் வீடியோவும் பொதுவெளியில் பகிரப்படும் என நம்புகிறோம்.
புலிகள் இருந்தவரை புலிகளுக்கு எதிரான மாற்று அரசியலை முன்வைக்கும் களமாக இலக்கிய சந்திப்பு இருந்தது.
ஆனால் புலிகள் அற்ற இன்றைய நிலையில் ஒரு முற்போக்கு அரசியலை முன்னெடுக்கும் களமாக இலக்கிய சந்திப்புகள் இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாகும்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இலக்கிய சந்திப்புகளை நடத்துவோர் இதை கவனத்தில் கொள்வார்களா?

No comments:

Post a Comment