Thursday, April 30, 2015

பிரிட்டன் அரசியல் தலைவர்கள் விவாதமும் ஒருமித்து மக்களை ஏமாற்றிய விதமும்

பிரிட்டன் அரசியல் தலைவர்கள் விவாதமும்
ஒருமித்து மக்களை ஏமாற்றிய விதமும்
கடந்தவாரம் லண்டனில் ஏழு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட விவாதம் நடைபெற்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை ஒரே மேடையில் பகிர்ந்து கொண்ட விவாதம் இது.
விவாதத்திற்கு முன்னரும் தலைவர்கள் எல்லலோரும் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கினார்கள். விவாதம் முடிந்த பின்னரும் கை குலுக்கினார்கள்.
இத்தகைய பண்பு இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நினைத்தும் பார்க்க முடியாதது. எனவே இது பாராட்டுக்குரியது தான்.
ஆனால் எல்லோரும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்றிய விதம் இருக்கிறதே அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
பட்ஜட்டில் துண்டு விழுகிறது. எனவே மக்களுக்கு வழங்கும் மானியங்களை குறைக்கப்போவதாக கூறுகிறார்கள். ஆனால் ஏன் இந்த துண்டு விழுகிறது என்பதை யாரும் விபரிக்கவில்லை.
இராக் யுத்தம். ஆப்கானிஸ்தான் யுத்தம் என தேவையற்ற பல யுத்த செலவுகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த யுத்தங்கள் தவறு என்று யாரும் கூறவில்லை.
மகாராணியாரிடம் இருக்கும் சொத்துக்களை தேசிய மயமாக்கினாலே பட்ஜட்டில் துண்டு விழுதலை நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் இங்கு எல்லா அரசுகளும் தொடர்ந்தும் மகாராணிக்கு மக்களின் பணத்தை வாரி வழங்குகின்றன.
மகாராணியின் பொன்விழா ஆண்டு. அவரது பேரப்பிள்ளையின் திருமணம் எல்லாம் விமர்சையாக பல மில்லியன் செலவில் கொண்டாடப்பட்டது. இதனால் வியாபாரம் பெருகும் என அப்போது கூறப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறு வியாபாரம் பொருகவில்லை என்றும் பட்ஜட்டில் துண்டு விழுகிறது என்றும் கூறுகிறார்கள்.
முன்னர் அகதிகள் வருகையால் பிரிட்டன் முன்னேற முடியவில்லை என்றார்கள். இப்போது ஜரோப்பாவில் இருந்து வருபவர்களால் பிரிட்டன் முன்னேற முடியவில்லை என்கிறார்கள். அப்படியானால் இந்த குறைவான கூலி உழைப்பாளிகளிடம் சுரண்டிய உபரி உழைப்பு எங்கு சென்றது?
தமது தவறான பொருளாதார கொள்கைகளை மக்கள் உணராமல் இருப்பதற்காக உழைக்கும் மக்களிடையே துவேசத்தை உருவாக்கிறார்கள். ஆனால் இவர்களின் கனவு ஒருபோதும் நிவைவேறப்போவதில்லை.
முதலாளித்துவமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை உழைக்கும் மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment