Thursday, April 30, 2015

செம்மணியில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி கிருசாந்தி இவர்களை மன்னிப்பாரா?

• செம்மணியில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி கிருசாந்தி இவர்களை மன்னிப்பாரா?
செய்தி- தந்தை செல்வா நினைவுப் பேருரை சந்திரிகா பண்டாரநாயக்கா நிகழ்த்தினார்
சம்பந்தன் அய்யாவின் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சந்திரிக்கா அம்மையார்தான் சமாதானத்திற்கான யுத்தம் என்று தமிழ் மக்கள் மீது பாரிய யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர்.
தமிழ் மக்களின் முள்ளிவாயக்கால் பேரழிவிற்கு வித்திட்டவர் , வழி சமைத்தவர் இந்த சந்திரிக்கா அம்மையார்தான்.
இந்த அம்மையாரின் ஆட்சியின்போதே செம்மணியில் பாடசாலை மாணவி கிருசாந்தி இலங்கை ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு புதைக்கப்ட்டார்.
இவருடைய ஆட்சியின்போது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு இதுவரை அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இந்த அம்மையார்தான் இன்றைய மைத்திரி அரசை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இன்றைய அரசு இன்னும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவில்லை.
கைப்பற்றிய நிலம் இன்னும் தமிழ் மக்களிடம் திருப்பி அளிக்கப்படவில்லை.
காணமல் போனவர்கள் பற்றி உறவினர்களுக்கு எதுவுமே இன்னும் கூறப்படவில்லை.
இன்றும் ராணுவத்தால் தமிழ் மாணவிகள் மீது பாலியல் வல்லுறவுகள் தொடருகின்றன.
இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சந்திரிக்கா அம்மையார் தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்துகிறார் என்றால் என்ன அர்த்தம்?
இத்தகைய சந்திரிக்கா அம்மையாரை உரையாற்ற சம்பந்தன் அய்யா அழைக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்?
இவர்களை படுகொலை செய்யப்பட்ட கிருசாந்திகள் மன்னிப்பார்களா?

No comments:

Post a Comment