Thursday, April 30, 2015

உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சிலையும் சிதைக்கப்பட்ட கன்பொல்லை தியாகிகள் நினைவு சின்னமும்!

• உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சிலையும்
சிதைக்கப்பட்ட கன்பொல்லை தியாகிகள் நினைவு சின்னமும்!
• வேலூரில் சாதி வெறியர்களால் டாக்டர் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கன்பொல்லையில் தியாகிகள் நினைவுச்சின்னம் சிதைக்கப்பட்டுள்ளது.
• சேலத்தில் தாழ்த்தப்பட்ட சிறுவன் வாயில் மலம் கரைத்து ஊற்றப்பட்டுள்ளது.
யாழ் ஏழாலையில் தாழ்த்தப்பட்டசாதி மாணவர்கள் பயிலும் பாடசாலை குடிநீரில் விசம் கலக்கப்பட்டுள்ளது.
• இலங்கையிலும் இந்தியாவிலும் சாதி வெறியர்கள் ஒரே மாதிரியாகவே செயற்படுகின்றார்கள்.
தரைப்படை, கடற்படை. விமானப்படை என பல படைகள் வைத்திருந்த புலிகளாலும் சாதிகளை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமை கொடுமைகளை தடுக்க முடியவில்லை.
தமிழகத்தில் சாதி விடுதலை அடைந்தால் மட்டுமே தமிழ் தேசிய விடுதலை அடைய முடியும் என கூறும் திருமாவளவன், இலங்கையில் தமிழீழ விடுதலை அடைந்தால் சாதி விடுதலை அடைய முடியும் என்று கூறுவது முரண் இல்லையா?
இது குறித்து விரிவான கட்டுரை பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

No comments:

Post a Comment