Thursday, April 30, 2015

வடக்கு மாகாண முதல்வர் இவர்களுக்காகவும் குரல் கொடுப்பாரா?

• வடக்கு மாகாண முதல்வர் இவர்களுக்காகவும் குரல் கொடுப்பாரா?
வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் பெண்களை பாலியல் வல்லுறவு மற்றும் கொலை புரிந்த குற்றத்திற்காக தமிழக சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் மூன்று நபர்களை விடுதலை செய்யும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் உள்ளவர்களின் மகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் சம்பந்தப்பட்டவர்கள் தனது நியாயாதிக்கத்திற்கு உட்பட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காகவும் இக் கடிதத்தினை தான் எழுதியதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண முதல்வர் விக்கி அவர்கள் காலஞ்சென்ற ஆயுள் சிறைவாசி பிரேமானந்த சுவாமிகளின் அபிமான சீடர் என்பதாலே இந்த கடித்தினை எழுதினார் என்பது அவர் இங்கு சொல்லாமல் மறைத்திருக்கும் விடயமாகும்.
விக்கி அவர்கள் கூறுகின்றபடி மனிதாபிமான அடிப்படையில் இக் கடிதத்தினை எழுதியுள்ளார் என எடுத்துக்கொண்டாலும் இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவெனில் இதே தமிழகத்தில் எந்தவித குற்றமும் இழைக்காமல் பல வருடங்களாக சிறப்புமுhமில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலை குறித்து இந்த முதல்வர் ஏன் கடிதம் எழுதவில்லை?
இந்த அப்பாவி அகதிகளின் விடுதலை குறித்து குரல் தரும்படி பல முறை இந்த முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஏன் இதற்காக குரல் கொடுக்க மறுக்கிறார்?
இந்த அகதிகளும் இந்த முதல்வரின் நியாயாதிக்க பிரதேசத்தை சேர்ந்தவர்கள்தானே! அப்படியாயின் இவர்களுக்காக ஏன் மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்கவில்லை?
ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சின்ன சாந்தன் என்பவர் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்தவர். இவரின் வயதான தாயார் இறப்பதற்கு முன் தன் மகனை ஒரு முறையேனும் பாhத்துவிட விரும்புகிறார். சின்ன சாந்தனும் சிறையில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார். அப்படியாயின் அவரின் விடுதலைக்கு இந்த மாகாண முதல்வர் ஏன் கடிதம் எழுதவில்லை?
பாலியல் வல்லுறவு குற்றவாளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் வடமாகாண முதல்வர் அப்பாவிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க மறுக்கிறார்.
தமிழ் மக்களுக்கு இதைவிட கேவலமான நிலை வேறு என்ன இருக்க முடியும்?

No comments:

Post a Comment