Thursday, April 30, 2015

தவறுகளை மரணங்கள் மன்னித்துவிடுமா?

• தவறுகளை மரணங்கள் மன்னித்துவிடுமா?
மன்னிக்க முடியாத தவறுகளை செய்த ஒரு நபர் மரணமடைந்ததும் அவரது தவறுகளை மறந்து அவரை “ஓகோ” என போற்றி புகழும் ஒரு மரபு சரியானதா என்ற கேள்வி எம்முள் எழுகிறது.
இரு நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த ஜெயகாந்தன் அவர்களை சிலர் போற்றி புகழ்ந்து இலக்கிய உலகின் பேரிழப்பு என எழுதுவதை படிக்கும்போது அந்த கேள்வி எழுகிறது.
என்னதான் அவர் ஜாம்பவானக இருந்தாலும் அவரது எழுத்து பரந்துபட்ட மக்களுக்கு எதிராக இருக்குமாயின் எம்மைப் பொறுத்தவரையில் அவை வெறும் காகித குப்பையே!
அமைதிப்படை என்னும் பெயரில் சென்ற இந்திய ராணுவம்
ஈழத்தில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது சரி என்றார்.
அது அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது நியாயம் என்றார்.
பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்தது சரி என்றார்.
அதுமட்டுமன்றி இதகை; கண்டித்த தமிழக தமிழர்களை புலிகளின் கைக்கூலிகள் என்று ஏளனம் செய்தார்.
தனது இனத்திற்கு துரோகம் இழைத்த இத்தகைய ஜெயகாந்தனை
அவர் மரணமடைந்ததும் அதனை மறந்து எப்படி போற்றி புகழ முடியும்?
எம்மைப் பொறுத்தவரையில் மரணங்கள் தவறுகளை மன்னிப்பதில்லை.

No comments:

Post a Comment