Wednesday, July 27, 2022

சேர்!

சேர்! நள்ளிரவில போய் மகிந்தவுக்கு ஆலோசனை சொல்லுறீங்க. அப்புறம் இளைஞர்களை போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொல்லுறீங்க. கோத்தாவுக்கும் புலம்பெயர் தமிழருக்கும் பாலம் அமைப்பேன் என்கிறீங்க. அப்புறம் கோத்தா நியமித்த ரணிலை ஏற்க முடியாது என்கிறீங்க. இந்திய தூதர் சொன்னதால்தான் டலஸ் அழகப்பெருமாவை ஆதரித்தது என்கிறீங்க. இந்தியா தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்கிறது. ஏன் இப்படி? என்று கேட்டால் “எனக்குதான் முதுகெலும்பு இருக்கு நான் பாரம் சுமக்க தயார்” என்கிறீங்க. ஏதாவது ஒன்றை உறுதியாய் சொல்லுங்க சேர். நாங்க எத்தனை தடவைதான் மாத்தி மாத்தி உருட்டுறது? சுமந்திரன் தம்பிகளின் புலம்பல்

No comments:

Post a Comment