Tuesday, April 30, 2024

தமிழ்த்தேசியம் சாதி ஒழிப்பை

தமிழ்த்தேசியம் சாதி ஒழிப்பை முன்வைக்கவில்லை என்றும் அம்பேத்காரிய வழியில் அதிகாரத்தை கைப்பற்றி சாதியை ஒழிக்கப்போவதாக அருண் சித்தார்த் கிளப்கவுசில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பிற்கான “மீன்சுருட்டி அறிக்கை”யை முன்வைத்துள்ளார். அதில் அம்பேத்காரியம் மற்றும் பெரியாரிய வழியில் சாதியை ஒழிக்க முடியாது என்பதையும் மார்க்சிய சிந்தனையில் தமிழ்த்தேசிய விடுதலை மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்பதை விளக்கியுள்ளார். அம்பேத்காரியத்தை பின்பற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தோழர் தமிழரசன் முன்வைத்த மீன்சுருட்டி அறிக்கையை சரியானது , சிறப்பானது என பாராட்டியுள்ளார். அதுமட்டுமன்றி தனக்கு தோழர் தமிழரசன் தொடர்பு கிடைத்திருந்தால் தான் அவருடன் சேர்ந்து இயங்கியிருப்பேன் என்றும் கூறியுள்ளார். எனவே தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் அருண் சித்தார்த், தோழர் தமிழரசன் முன்வைத்த சாதி ஒழிப்பு அறிக்கை பற்றி பதில் அளிப்பாரா? கீழ்வரும் இணைப்பில் தோழர் தமிழரசனின் மீன்சுருட்டி அறிக்கையை படிக்கலாம். https://tholarbalan.blogspot.com/2024/04/blog-post_10.html

No comments:

Post a Comment