Tuesday, April 30, 2024

குத்துச்சண்டை போட்டியில் ஒருவர்

குத்துச்சண்டை போட்டியில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. பத்து எண்ணுவதற்குள் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் தோல்வி அடைந்ததாக கருதப்படும் தோல்வி அடைந்தவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவரை வெற்றி பெற்றவர்கள் ஒருபோதும் வெற்றியை அனுபவிக்க முடியாது. செய்தி – மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கமாட்டோம் - சிங்கள ராணுவ தளபதி

No comments:

Post a Comment