Tuesday, April 30, 2024

J.பேபி

•J.பேபி மனநிலை பாதிக்கப்பட்ட மகனை எந்த தாயும் சுமையாக நினைப்பதில்லை. பராமரிக்காமல் ஒதுக்குவதில்லை. ஆனால் தாய் மனநிலை பாதிக்கப்பட்டால் பிள்ளைகள் சுமையாக நினைக்கின்றனர். பராமரிக்காமல் ஒதுக்குகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் தவறுதலாக கல்கத்தா சென்று விடுகிறார். பிள்ளைகள் தம் தவறை உணர்ந்து கல்கத்தா சென்று தாயை மீட்டு வருவதே இப் படத்தின் கதை. இது ஒரு உண்மை கதை. நன்கு படமாக்கியுள்ளார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட தாயாக ஊர்வசி சிறப்பாக நடித்துள்ளார். நல்ல படம். முடிந்தால் ஒருமுறை பாருங்கள்.

No comments:

Post a Comment