Tuesday, April 30, 2024

நினைவு அஞ்சலிகள்!

• நினைவு அஞ்சலிகள்! பெரியார் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் 06.04.2021 யன்று காலமானார். நான் சிறை மற்றும் சிறப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை தொடர்ந்து எட்டு வருடங்களாக தனது சிந்தனையாளன் இதழை இலவசமாக அனுப்பி உதவினார். அதுமட்டுமன்றி அவ் இதழில் சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பிரசுரித்து அம்பலப்படுத்தியிருந்தார். நான் அவரை ஒருமுறை நேரில் சந்தித்தபோது தனக்கு “யாழ்ப்பாணம் தேசவழமைச்சட்டம்” நூல் வேண்டும் எனக் கேட்டிருந்தார். அது மிகவும் பழைய நூல் என்பதால் யாழ்ப்பாணத்தில் பிரதி எதுவும் அப்போது கிடைக்கவில்லை இந்நிலையில் கொழும்பு தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனத்தில் இருந்த பிரதியின் போட்டோ கொப்பி அவருக்கு கொடுத்தேன். அப் பிரதியைக் கண்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நூலைப் பெறுவதற்கு தான் நீண்ட நாட்கள் முயற்சி செய்து வந்ததாக கூறினார். அவர் எந்தளவு தூரம் ஈழத் தமிழர்கள் குறித்து தேடல்களை செய்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று ஆகும். இறுதிவரை உறுதியான ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய ஐயா ஆனைமுத்து அவர்களுக்கு நினைவு அஞ்சலிகள்.

No comments:

Post a Comment