Tuesday, April 30, 2024

தந்தை செல்வா அவர்கள் பெரியாரை சந்தித்து

தந்தை செல்வா அவர்கள் பெரியாரை சந்தித்து ஆதரவு கோரியபோது பெரியார் ஆதரவு வழங்க மறுத்துவிட்டார். அதேபோன்று மாணவர் பேரவை தலைவர் சத்தியசீலன் அவர்கள் பெரியாரை சந்தித்து ஆதரவு கோரியபோதும் பெரியார் ஆதரவு வழங்க மறுத்துவிட்டார். ஆனால் பெரியார் மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த வீரமணி அவர்கள் அதரவு வழங்கினார். அவர் புலிகளுக்கு உதவிகளும் வழங்கினார். வீரமணி மட்டுமன்றி கௌத்தூர் மணி, கோவை ராமகிருஸ்ணன், ஆனைமுத்து போன்ற திராவிட இயக்க தலைவர்களும் ஆதரவு வழங்கினர். மற்ற எல்லா திராவிட இயக்க தலைவர்களும் ஈழத் தமிழருக்கு ஆதரவு வழங்கிய நிலையில் பெரியார் மட்டும் ஆதரவு வழங்க மறுத்தது ஏன்? குறிப்பு – நாளை (26.04.2024) தந்தை செல்வா அவர்களின் 47வது நினைவு தினம்.

No comments:

Post a Comment