Tuesday, April 30, 2024

கடந்த வாரம்தான் லண்டனில்

கடந்த வாரம்தான் லண்டனில் தமிழர் வர்த்தக சந்தை நடைபெற்றது. ஆனால் இன்று புலம்பெயர் வர்த்தகர்கள் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று சுமந்திரன் கூறியுள்ளார். முதலில் புலம்பெயர் தமிழர்களை தாயக அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றவர் இப்போது புலம்பெயர் வர்த்தகர்களை கூறுகின்றார். யாராவது ஒரு வர்த்தகர் தவறாக நடந்திருந்தால் அதை சுட்டிக்காட்டி கண்டிக்க வேண்டும். மாறாக அனைத்து புலம்பெயர் வர்த்தகர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருங்கள் என கூறுவது தவறு. புலம்பெயர் தமிழர்களையும் வர்த்தகர்களையும் ஒன்றிணைத்து அவர்களை பயன் உள்ள வகையில் தாயக தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதுவே ஒரு தாயக அரசியல் தலைவரின் கடமையாக பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களை ஒதுங்கியிருங்கள் என்று கூறுவது தவறு. இது கண்டிக்கத்தக்கது. சுமந்திரன் லண்டன் வரும்போது அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்தச் சென்று உபசரிப்பவர்களும் வர்த்தகர்கள்தான். அவர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருங்கள் என்கிறாரா சுமந்திரன்?

No comments:

Post a Comment