Thursday, August 29, 2013

லண்டனில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

லண்டனில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

• சிங்கள மக்களை எதிரியாக பார்க்கத் தேவையில்லை.

• தமிழீழ தீர்வு கோரவில்லை. மாறாக ஜக்கிய இலங்கைக்குள்
ஒரு தீர்வை கோருகிறோம்
.
• சிங்க கொடி ஏந்தியதை தவறாக நினைக்கவில்லை.

• தாயகத்தில் உள்ள மக்கள் எங்களையே நம்புகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்க விரும்புகிறோம்.

லண்டனில் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் ஈஸ்ட்காம் பகுதியில் இன்று (17.08.2013) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 9.00 மணிவரை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாலை 6 மணிக்கு ஆரம்பமான கூட்டம் மாலை 8 மணிக்கு முன்னரே முடிவடைந்துவிட்டது. சுமார் 30 பேர் அளவில் சமூகமளித்திருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் ரெலோ இயக்க லண்டன் கிளைப் பொறுப்பாளர் சம்பந்தன் பேசினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு உரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழ் மக்கள் ஒருமித்து தமிழ்தேசிய கூட்டமைக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையேல் அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவு ஏற்படும் என எச்சரித்தார்.

பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பேசினார். அவர் தனது உரையில் கூட்டத்தில் உள்ளவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்னர் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் தான் என்ன சொன்னாலும் மக்கள் மறு பேச்சின்றி எற்றுக்கொள்வார்கள் என நினைத்தார். ஆனால் அவரின் ஏமாற்றை உணர்ந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பை வழங்கினார்கள். அதுபோல் புலிகளின் அழிவிற்கு பின்பு இனி தமிழ் மக்கள் தான் என்ன கூறினாலும் எற்றுக் கொள்வார்கள் என சம்பந்தர் நம்பினார். ஆனால் அவருக்கு முதன் முதலாக லண்டனில் கடும் எதிர்ப்பு இன்று காட்டப்பட்டிருக்கிறது.

சம்பந்தரின் வாழ்நாளில் இவ்வளவு எதிர்ப்பை ஒருபோதும் சந்தித்திருக்கமாட்டார். இனி அவர் லண்டனுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ விஜயம் செய்வாரா என்பதும் சந்தேகமே. அந்தளவிற்கு கூச்சல் குழப்பத்துடன் கூட்டம் அரைகுறையில் முடிந்தவிட்டது. ஒரு மூத்த தலைவர் இந்தளவு தூரம் அவமானப்பட்டிருப்புது வருத்தமே. இருப்பினும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்கள் எதிர்ப்பை என்றோ ஒரு நாள் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்.

(1)சிங்கள மக்களை எதிரியாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் சம்பந்தர். தமிழ் அமைர்கள் வாய் திற்க்காமல் மௌனமாக இருக்க சில சிங்கள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக மாகாணசபை திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் இதே அமைச்சர்கள் தமிழ் மக்கள் கொல்லப்படும் போது மௌனமாக ஆதரித்தவர்கள். இன்றும்கூட தமிழ்மக்களின் சயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள். இவர்கள் அரசில் தமது சில விருப்பங்களை நிறைவேற்ற மாகாணசபை விடயத்தை பாவிக்கிறார்கயேயொழிய உண்மையாக தமிழ் மக்கள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல.

(2) தமிழீழ தீர்வை கைவிட்டு ஜக்கிய இலங்கைக்குள் தீர்வை கோருவதாயின் முதலில் இது குறித்து புலத்தில் உள்ளவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் சம்பந்தர் விளக்க வேண்டும். அதைவிடுத்து தமிழ்நாட்டில் மாணவர்கள் தமிழீழத்திற்காக தீக்குளிக்கும்போது சம்பந்தர் ஜக்கிய இலங்கைக்குள் தீர்வைக் கோருவது அந்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

(3) சம்பந்தரின் குடும்பம் இந்தியாவில் உள்ளது. எனவே அவர் இந்தியாவை மீறி செயற்பட முடியாது. ஆனால் அதற்காக இந்தியா அதுவும் மன்மோன்சிங் உறுதி தந்திருக்கிறார் என லண்டனில் வந்து கூறுவது நகைப்பிற்கு இடமானது. 1977ல் இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று கூறி நம்பவைத்தது போல் இன்றும் இந்தியா வரும் என கூறி நம்ப வைக்க முயல்கிறார். அவரின் இந்த கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

இறுதியாக சம்பந்தர் ஜயாவுக்கு ஒரு வேண்டுகோள்!

மக்கள் வெறும் மந்தைகள் அல்ல. நீங்கள் நீண்டகாலம் மேயப்பனாகவும் இருக்க முடியாது. தயவு செய்து இனியாவது மக்களுக்கு துரோகம் செய்யாது மக்களின் நலன்களுக்காக போராட முயற்சி செய்யவும். இல்லையேல் வரலாற்றில் அமிர்தலிங்கம் எப்படி குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டாரோ அதுபோல் நீங்களும் தூக்கி யெறிப்படுவீர்கள்.

No comments:

Post a Comment