Thursday, August 29, 2013

ஜெயா அம்மையார் அவர்களே! சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை “மாடுகள்” என்று அறிவிக்கவும்.

ஜெயா அம்மையார் அவர்களே!

சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை “மாடுகள்” என்று அறிவிக்கவும்.

அதனால் குஜராத் மோடி யாவது தனது அரசியலுக்காக “மாடுகளை துன்புறுத்தாதீர்” என கோருவார்
.
“புளுகிராஸ்” அமைப்பாவது சிறப்புமுகாம் சென்று மாடுகளை (அகதிகளை) கண்காணிக்கும்!

இந்தியாவில் மிருகங்களை துன்புறுத்தக் கூடாது என மிருகவதைச் சட்டம் உள்ளது. யாராவது மிருகங்களை துன்புறுத்துகிறார்களா என அவதானிக்க புளுகிராஸ் போன்ற அமைப்புகள் உண்டு. அதையும்விட சில தொண்டர் அமைப்புகளும் இருக்கின்றன. இன்னும் சொன்னால் இதற்காக சில நடிகைகள் நாய்க்குட்டிகளுடன்கூட போஸ் கொடுத்து விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் துன்புறுத்தப்படுவதை தடுப்பதற்கு ஒரு சட்டம் இல்லை. கண்காணிப்பதற்கு ஒரு அமைப்பு கூட இல்லை. ஏனெனில் ஈழத் தமிழ் அகதி என்பவன் மனிதன் அல்ல. அவன் மிருகத்தைக் விடக் கேவலமானவன் என்றே ஜெயா அரசு கருதுகிறது.

சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு பலர் பல வடிவங்களில் போராடி விட்டனர். ஆனால் ஜெயா அம்மையாரின் செவிட்டு காதில் அது இன்னும் விழவில்லை. அதேவேளை அவர் இலங்கை அரசு நட்பு நாடு அல்லவாம். அங்கு நடைபெறும் மாநாட்டுக்கு பிரதமர் போகக்கூடாதாம் என்று கடித விளையாட்டு காட்டுகிறார். அவர் உண்மையில் இலங்கை தமிழ் மக்கள் மீது இரக்கம் உள்ளவராயின் முதலில் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது அவர்களை மனிதர்களாக மதித்து சட்டப்படியாவது பராமரிக்கவும். இல்லையேல் ஜெயா அம்மையாரும் மகிந்த ராஜபக்சவின் உறவினரே என்றுதான் தமிழர்கள் கருதவேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment