Thursday, August 29, 2013

சீமானுக்கு திருமண வாழ்த்துகள்!

சீமானுக்கு திருமண வாழ்த்துகள்!

சீமானின் திருமணம் குறித்து எற்கனவே நான் அறிந்திருந்தாலும் இது குறித்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் வந்த பின்பே எனது கருத்துக்களை தெரிவிப்பது முறையானது என்று கருதியதால் இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்தேன்.

ஆரம்பகாலங்களில் “ஆசீர்” என்று அழைக்கப்பட்ட சார்ல்ஸ் அல்லது சீலன் என்பவர் குண்டு காயத்திற்கு சிகிச்சை பெற மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (1982களில்) அங்கு கடமைபுரிந்த தாதி (நர்ஸ்) ஒருவரை விரும்பினார். இருவருக்கும் காதல் பிறந்தது. ஆனால் இதை அறிந்த தலைவர் பிரபாகரன் “நாம் போராளிகள். எங்களுக்கு இந்த காதல், கீதல் எல்லாம் இருக்கக்கூடாது” என கண்டிப்புடன் கூறி சார்ல்ஸ்சை பூரண நலம் பெற முன்னரே பாதியில் நாட்டுக்கு திருப்பி அனுப்பினார். ஆனால் அதே தலைவர் பிரபாகரன் பின்னர் மதிவதனியைக் காதல் செய்ததும் அவருக்கு பிறந்த முதல் குழந்தைக்கு சார்ல்ஸ் என பெயர் வைத்ததும் அனைவரும் அறிந்ததே.

அதே போன்று திருமணம் செய்யாமல் தமிழீழ போராட்டம் நடத்தப் போகிறேன் என கூறிவந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பின்னர் ஒரு ஈழத் தமிழ் பெண்ணை அதுவும் ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து வாழ்வு கொடுக்கப் போவதாகக் கூறினார். இதற்காக அவருடன் கூட இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த விபரங்களை கூறி சீமானுக்கு ஒரு நல்ல ஈழ தமிழ் பெண் பார்த்து தருமாறு கேட்டார். அதற்கு நான் இவ்வாறு வாழ்வு கொடுத்து (தியாகம் செய்யும்) திருமணங்கள் நான் அறிந்தவரையில் வெற்றியளிக்கவில்லை என்றும் தமிழ்நாட்டிலேயே அவருடைய கொள்கைக்கு ஏற்ற ஒரு பெண்ணை காதல் செய்து மணம் புரியுமாறு ஆலோசனை கூறினேன்.

நான் குறிப்பிட்டது போன்று சீமான் அவர்கள் ஒரு தமிழ்நாட்டு பெண்ணை காதல் செய்து மணம் புரிய இருப்பதாக அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேவேளை, மறைந்த அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வனுடன் இருந்த அலெக்ஸ் என்பவரின் விதவை மனைவியான கயல்விழி என்பவரை திருமணம் செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு அழைத்து தன்னுடன் கூட வைத்திருந்துவிட்டு தற்போது அந்த பெண்ணை சீமான் ஏமாற்றிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் உறவினர்களோ இது பற்றி எதுவும் கூறியதாக நான் அறியவில்லை. எனவே இதை என்னால் நம்ப முடியவில்லை. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. இது சீமான் மீது பொறாமை கொண்டவர்களின் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தியாகவும் இருக்கலாம். எனவே இதனை ஆரம்பத்திலேயே மறுப்பது சீமானுக்கு நல்லது. ஏனெனில் சீமான் மீது பல ஈழத் தமிழர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆதலினால் இந்த செய்தி குறித்து சீமான் அவர்களோ அல்லது அவருடைய ஆதரவாளர்களோ உண்மையை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கயல்விழி மற்றும் சீமான் தொடர்பாக எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் செய்தியை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=560877330639617&id=100001520667093&refid=8&_ft_=qid.5910709838357491456%3Amf_story_key.5879835537953486803&_rdr#s_858666aa7edc4d21e64fab3ab42a4e9f

No comments:

Post a Comment