Saturday, August 10, 2013

Noam Chomsky

நோம் சோம்கி (வயது -84) என்பவர் உலகின் மிகச் சிறந்த புத்திஜீவிகளில் ஒருவர். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியாக கடமையாற்றுகிறார். யுத்தம், அரசியல, மனித உரிமைகள் தொடர்பாக 100 ற்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இலங்கை சிறை மற்றும் தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாதது குறித்து கேட்டபோது அவர் என்னிடம் தெரிவித்த கருத்து வருமாறு,

The terrible crimes committed against Tamils by Sri Lankan forces, particularly in the late stages of the conflict, passed with little notice in the West, and the same is true of the continuing crimes in the detention camps for Sri Lankan Tamils. It is long past time for these atrocities to be recognized and ended, for the victims to be rescued, and for the guilty to be brought to justice.

I’ve signed petitions on these terrible matters before, and would do so again.

Noam Chomsky

அமெரிக்காவில் இருக்கும் ஒரு பேராசிரியர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். ஆனால் மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் நமது கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ இதுவரை இது குறித்து ஒரு வார்த்தை பேசாதது எமக்கு மட்டுமல்ல அந்த அடைத்து வைக்கப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

மாவட்டம் தோறும் “டெசோ” கூட்டம் நடத்தும் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி கோராதது அவரது இலங்கைத் தமிழர் மீதான அனுதாபம் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றது. கொழும்பில் காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கோரும் தமிழக அரசியல்வாதிகள் முதலில் தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரட்டும்.

லண்டன் வந்த எழுத்தாளர் சல்மா அவர்களிடம் இந்த சிறப்பு முகாம் கைதிகளின் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தேன். அவர் தான் தலைவர் கலைஞருடன் பேசி நிச்சயம் வழி செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார். இதுவரை அவரிடமிருந்து இது குறித்து எந்த செய்தியும் வரவில்லை. ஏமாற்றமாக இருக்கிறது.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும்கூட சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் தளபதிகள் கே.பி, கருணா, தமிழினி போன்றோர் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை இதுதான் மகிந்த சிந்தனையோ?

தான் வென்றால் மகிந்தவுடன் இணக்க அரசியல் செய்வேன் என்று கூறும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் கூட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து பேசாதது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment