Thursday, August 29, 2013

செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் சார்பாக கேட்கிறோம்!

செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் சார்பாக கேட்கிறோம்!

இன்று இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோரே

இந்திய ஆதரவுடன் நடந்த இந்த கொலைகளுக்கு நியாயம் சொல்வீரா?

அந்த சிறுவர்கள் கையில் துப்பாக்கி இல்லை. அவர்கள் வயிற்றில் வெடிகுண்டுகள் கட்டியிருக்கவில்லை. இருந்தாலும் விமானம் மூலம் குண்டுகள் வீசிக் கொல்லப்பட்டனர். 2006ம் ஆண்டு அகஸ்டு 14ம் திகதி செஞ்சோலையில் இலங்கை இராணுவம் 16 குண்டுகளை வீசி 52 சிறுவர்கள் உட்பட 62 பேர்களை படுகொலை செய்தது.

இன்று சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிப்போர் அன்று இந்த குழந்தைகள் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தது ஏன்?

இன்று சிரியாவில் இரசாயணக் குண்டுகள் பாவிக்கப்படுவதாக கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் அன்று தமிழர்கள் மீது இரசாயண குண்டுகள் வீசப்பட்டபோது ஏன் கண்டிக்கவில்லை?

தமிழர் பிரதேசத்தில் எண்ணெய் கிணறுகள் இல்லாதபடியால்தானா இவர்கள் கருத்து தெரிவிக்வில்லை? அல்லது தமிழர்கள் மனிதர்களே அல்ல என்று நினைத்தா மௌனமாக இருந்தார்கள்?

குஜராத்தில் மாடு கொல்லப்படுவதாக கண்ணிர் வடிக்கும் மோடியின் பா.ஜ.க வன்னியில் மக்கள் அதுவும் அவர்களின் இந்துமத மக்கள் கொல்லப்படும்போது என் கண்டிக்கவில்லை. ஈழத் தமிழன் ஒரு மாட்டைவிடவா கேவலமானவன்?

இன்று இந்தியாவில் சுதந்திர தினத்தை கொண்டாடுவோரிடம் தயவாக கேட்கிறோம். உங்கள் இந்திய அரசின் ஆதரவுடன் நடந்த இந்த கொலைகளுக்கு என்ன நியாயம் வழங்கப் போகிறீர்கள்? எங்களை அழித்து எங்கள் சாம்பல்மேட்டில் நின்று கொண்டாட்டம் நடத்தவா நீங்கள் சுதந்திரம் பெற்றீர்கள்?

தூ ... வெட்கம்!
 — with Suppiah Pancharatnam.

No comments:

Post a Comment