Saturday, August 10, 2013

மது ஒழிப்பிற்காக போராடிய மாணவர்கள் கைது

• மது ஒழிப்பிற்காக போராடிய மாணவர்கள் கைது.
• மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்

நந்தினி உட்பட போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை அந்த மாணவர்கள் தொடர்கின்றனர். அகிம்சை வழியில் போராடிய அம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்த காவல்துறையையும் அதற்கு உத்தரவு வழங்கிய தமிழக அரசையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

உண்ணாவிரத போராட்டங்கள் தீர்வு தராது என்ற நிலையிலும் அதனை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் இம் மாணவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதிகள் என்று அரசு முத்திரை குத்தும். அகிம்சை வழியில் போராடினால் கைது செய்து சிறையில் அடைக்கும். இதுதான் மத்திய மாநில அரசுகளின் வாடிக்கை.

ஆயிரக்கணக்கில் அரசியல் கட்சிகள் இருந்தும் மது ஒழிப்பிற்காக மாணவர்கள் வீதியில் இறங்க வேண்டி இருக்கின்றது என்றால் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் பதவிக்காக அலைபவர்களேயொழிய மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பது நிரூபனமாகிறது.

உண்ணாவிரதம் இருந்தாலோ அல்லது மதுக்கடைகளை முற்றுகையிட்டாலோ இந்த அரசு கவலைப்படாது. ஆனால் இந்த மதுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் கைவைத்தால் அடுத்த நிமிடமே இந்த அரசுகள் ஓடிவரும். ஏனென்றால் இந்த மது ஆலைகளின் பங்குதாரர்கள் இந்த அரசியல்வாதிகளே.

மதுவை ஒழிக்க விரும்புவோர் கை வைக்க வேண்டிய இடம் மதுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே.

No comments:

Post a Comment